இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், பொத்துவில் தேர்தல் தொகுதியில், பொத்துவில் பிரதேசத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர் ஈழநிலா 1983.5.2. இல் பிறந்தவர்.ஈழத்தில் மரபுக் கவிதை எழுதி வரும் இளம் கவிஞர்களுள் மிக முக்கியமானவர். பொத்துவில் மத்திய கல்லூரியின் பழைய மாணவராகவும், இலங்கை அஸ்ரப் கலை இலக்கிய பேரவையின் தலைவராகவும் இருக்கும் இவர், ஒரு தசாப்த காலமாக ஈழத்து இலக்கியத்துக்கு தன் படைப்புக்கள் மூலம் பங்களிப்பு செய்து வருகிறார்.இவரது 200க்கும் மேற்பட்ட கவிதை, சிறுகதை, பத்தி எழுத்துக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் ,இணைய சஞ்சிகைகளான கீற்று,வார்ப்பு,பதிவுகள்,எழுத்து,புதுமை போன்றவற்றிலும் ''ஈழநிலா'', ''பொத்துவில் அஸ்மின் உதுமாலெவ்வை'', ,''பொத்துவிலூர் அஸ்மின்'' ''யு.எல்.எம்.அஸ்மினா'' எனும் பெயர்களில் பிரசுரம் பெற்றுள்ளன.
''விடைதேடும்வினாக்கள்''(2003) .''விடியலின் ராகங்கள்''(2002) எனும் மகுடத்தில் இதுவரை இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். ''ஈழநிலாவின் கவிதைகள்'', ஈழத்து கவிஞர்கள் பற்றி சுடர் ஒளி வார வெளியீட்டில் இவர் எழுதிய ''ஈழநிலாவின் உணர்வுகள்'' பத்தி எழுத்துக்கள் பாகம் ஒன்றும் மிக விரைவில் நூலாக வெளிவர இருக்கிறது. தற்போது இலங்கையிலிருந்து ஒளிபரப்பாகும் சர்வதேச தமிழ் தொலைக்காட்சியான 'டான் டீவியின்'' நிகழ்ச்சி தொகுப்பாளராக கடமைபுரியும் இவர் டான் டீவியில் ''சூரிய விரல்கள்'' என்ற இலக்கிய நிகழ்ச்சி தயாரித்து வழங்குகின்றார்.
.சக்தி டீவியின்‘இசை இளவரசர்கள்’போட்டியில7000போட்டியாளர்களுக்குள் தேர்வான 16 பாடலாசிரியர்களுள் இவரும் ஒருவர்.ஏலவே தேசியமட்ட கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு ''ஜனாதிபதி விருது''(2001) பேராதனை பல்கலைக்கழகத்தின் ''தங்கப் பதக்கம்'' (2003) உட்பட ஏழுவிருதுகளை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Interests
கவிதை, சிறுகதை, நாவல்,பாடலிற்றல், அறிவிப்பு பத்தி எழுத்து, விமர்சனம், நல்ல சினிமா (கலை இலக்கியம்)
Favorite Music
Favorite Movies
காதல், அழகி ,கற்றது தமிழ்,
ஆட்டோகிராப், ஒன்பது ரூபாய் நோட்டு
Favorite TV Shows
''கனாக காணும் காலங்கள்'', "கிரேன் மாஸ்டர்",
"சூரியவிரல்கள்" (டான் டீவி)
Favorite Books
எனது கவிதை நூல்கள்.
01 விடைதேடும் வினாக்கள்(2001)
02.விடியலின் ராகங்கள்(2002)
03.ரத்தமில்லாத யுத்தம்(2007)
கவிஞர் வைரமுத்துவின் நூல்களையும் வாசிக்கிறேன.;
கன்னித் தமிழை நேசிக்கிறேன்.
“வாசி வாசிக்கப்படுவாய்”
“எழுது எழுதப்படுவாய்
ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி என் உயிரை உயிரை நீ ஏந்தி ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி இனி நீதான் எந்தன் அந்தாதி (நெஞ்சுக்குள்..) --------------------------------------------- ''எமது 'டேன் தமிழ் ஒளி' வானொலியின் குறியீட்டு பாடல்''
உலகெங்கும் கேட்டிடும் வானொலி உயிருக்குள் வாழ்ந்திடும் காதலி கானங்கள் ஒவ்வொன்றும் தேன்துளி கவிதையே எம்மொழி...
உலகத்தின் காதில் தேனூற்றினோம் உறங்காமல் விழிவிளக்கேற்றினோம் திக்கெட்டும் தமிழுணர்வூட்டினோம் தீமையை ஓட்டினோம்
பூவாசம் வாசம் பூவாசம் எங்கள் தேசம் தேசம் எம் சுவாசம் நீங்கள் தேசம் கடந்து போனாலும் எங்கள் நேசம் பாசம் உயிர்வாழும்.... (உலகெங்கும்)